நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினம் நினைவு கூர்வோம்:

“புரட்சி” என்ற வார்த்தை நம் காதுகளில் விழுந்தவுடன் நம் எண்ணத்தில் உடனே தோன்றுபவர்கள்; புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவி ஜெயலலிதா. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். திரைத்துறையிலிருந்து அதிகார அரசியலுக்கு வந்த இவர்களுக்கு புரட்சியின் பொருள் கூட புரியாது. ஆனால்….. புரட்சித்தலைவன் என்ற சொல் உலகில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர்தான் மேதை லெனின்! அந்த புரட்சி வென்ற நாள்தான் 1917 நவம்பர் 7 ஆம் நாள். இந்நாள் உலக கம்யூனிஸ்ட்களால் கொண்டாடப்படுகின்ற ஓர் ஒப்பற்ற நாள். புரட்சிக்கு முன்னால் ஜார்ஜ்…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -9

நிலப்பிரபுத்துவத்தின்‌ அழிவின்‌ மீது முதலாளித்துவத்தின்‌ வளர்ச்சி என்ற செயல்முறை ஐரோப்பாவில்‌ நடைபெற்றதைப்‌ போல இந்தியாவில்‌ காண முடியாது. ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்‌ இந்தியாவின்‌ புராதனப்‌ பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கிய போதிலும்‌, நவீன முதலாளித்துவப்‌ பொருளாதாரத்திற்கான சக்திகளைக்‌ கட்டவிழ்த்து விடுவதன்‌ மூலம்‌ அதனிடத்தில்‌ அதனை அமர்த்துவதற்கு அவர்கள்‌ முயற்சிக்கவில்லை. எனவே இந்தியாவில்‌ முதலாளித்துவ பொருளாதாரத்தின்‌ வளர்ச்சி என்பது வேறுபட்டதொரு பாதையைப்‌ பின்பற்றியது. அந்தப்‌ பாதையானது வித்தியாசமான முரண்பாடுகள்‌, தடைகள்‌ மற்றும்‌ இந்திய மக்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்கள்‌ நிறைந்ததாகவே இருந்தது. இவ்வாறு…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -8

இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை இங்கிலாந்திற்கு அதன் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி செய்ததோடு மட்டுமின்றி ,இங்கிலாந்தில் தொழில் உற்பத்தி பொருட்களை இந்தியாவில் விற்பதற்கான அவசியத்தை இங்கிலாந்து முதலாளிகள் உணரத் தலைப்பட்டனர். வேறு வார்தைகளில் கூறுவதானால் வரியேதுமற்ற சுதந்திரமான வர்த்தகம் என கூறலாம். 1757ஆம் ஆண்டின் பிளாஸி யுத்தத்திலிருந்து இந்தியாவுடனான வர்த்தகத்தில் கிழக்கிந்திய கம்பெனி கொண்டிருந்த ஏகபோக உரிமை என்பது ஒட்டுமொத்த பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் சுதந்திர வர்க்க நலனை பாதுகாப்பதாக அமையவில்லை .புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்தில்…

Read More

கீழத்தஞ்சை விவசாயிகள் எழுச்சியின் முன்னோடி புரட்சியாளர் பிசீனிவாசராவை நினைவு கூர்வோம் !

நிலப்பிரபுக்கள், கோவில்கள் , மடங்கள் ஆகியவற்றின் சர்வ ஆதிக்கம், சவுக்கடி & சாணிப்பால் அடக்குமுறை கீழ் வாழ்ந்த பண்ணையடிமைகள், உழைப்புக்கு ஏற்ற நியாயமான பங்கும், உரிமைகளும் இல்லாத குத்தகை விவசாயிகள் …எனத் தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவம் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட விவசாய சமூகத்தின் விடுதலைக்காக பணியாற்றிய உன்னதமான கம்யூனிஸ்ட்களில் சிவப்பு நட்சத்திரமாக திகழ்கிறார், BSR என அழைக்கப்பட்ட தோழர். பி.சீனிவாசராவ். 1961 செப்டம்பர் 30 அதிகாலை சுமார் 5 மணியளவில், தஞ்சாவூரில் தோழர்கள் உடன் இருக்க,…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -7

ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் புதிய நிலப்பிரபுத்துவ அமைப்பு: காலனியாட்சியும்,பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டலும் இந்தப் பாரம்பரியமான மற்றும் சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சமூகங்களின் உற்பத்தி முறையினை முற்றிலுமாக நிர்மூலம் செய்தன. “18ஆம் நூற்றாண்டு முழுவதிலும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட செல்வங்கள் அனைத்துமே பெருமளவிற்கு அந்த நாட்டை நேரடியாகச் சுரண்டுவதால் பெற்றதே தவிர ,வணிகத்தினால் பெற்ற செல்வம் என்பது ஒப்பளவில் மிகக் குறைவானதே ஆகும். அங்கு கிடைத்த மாபெரும் செல்வங்கள் அனைத்தும் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவின்…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -6

பழைய இந்தியப் பொருளாதாரத்தின் வடிவமும் சமூகமும்: 33 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற இன்றை இந்தியாவானது வரலாற்றின் கூர்முனையில் இப்போது நின்று கொண்டிருக்கிறது.நவீன உலகத்தை இறுக்கிப் பிடித்து வரும் அடிப்படையான பிரச்சினைகளும் மோதல்களும் இந்தியாவில் தீவிரமான வகையில் வெளிப்பட்டு வருகின்றன. இந்திய மக்களின் கடந்தகாலம் என்பது நிலப்பிரபுத்துவ மன்னராட்சி, அந்நிய நாட்டின் கீழ் அடிமை, மனிதத்தன்மையற்ற சுரண்டல் மற்றும் மிக மோசமான துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிரான கடுமையான போராட்டங்களை…

Read More

பாட்டாளி வர்க்கத்தின் அறிவுப் பொக்கிஷம் மூலதனம் 1867 செப்டம்பர் 14ந்தேதி அதன் முதல் தொகுதி வெளியிடப்பட்டது:

இந்த செப்டம்பர் மாதத்தில் தான் கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தின் முதல் தொகுதியை வெளியிட்டார். அவர் எழுதிய ஏராளமான அரசியல் பொருளாதார கட்டுரைகள் மூலதனமாயிற்று. உலகில், அதுவரை இது போன்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அவை ஒருபக்க சார்பானவை. முதலாளித்துவம் நீடித்திருக்க எழுதப்பட்டவை. மாமேதை கார்ல் மார்க்ஸ் மட்டுமே பாட்டாளி வர்க்க விடுதலையை அறிவியல் கண்ணோட்டத்தில் கண்டு, அதன் உழைப்பை எப்படியெல்லாம் முதலாளித்துவம் உறிஞ்சுகிறது என்பதை உலகுக்கு முதன்முதலில் விளக்கிச் சொன்னார். அதுவே மூலதனம் ஆயிற்று….

Read More

இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -5

இயற்கையாக நன்கு மிகப்பெரிய வளர்சியடைந்த தொழிலாளர் வர்க்கத்தை கொண்ட நாடாக இங்கிலாந்து விளங்கியது. தொழிற்சங்க வாதத்திற்கு முதலில் உயிர் கொடுத்த நாடு என்ற வகையில் சர்வதேச சகோதரத்துவம் சர்வதேச அமைப்பு போன்ற விசயங்களில் துவக்க கால பாட்டாளி வர்கத்தின் செயல்பாடுகளுக்கு களமாக இருந்தது. முதலாளித்துவ அமைப்பு என்பதே சர்வதேச தன்மை கொண்டது அது போல தொழிலாளி வர்க்க இயக்கமும் அமைந்திருந்தது .சாசன இயக்கத்திலும் கூட சர்வதேச போக்குகள் காணப்பட்டன. பல்வேறு தன்மைகள் கொண்ட சர்வதேச இயக்கங்கள் பலவும்…

Read More

இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -4

சாசனவாதிகளின் போராட்டங்கள் தோல்வியை சந்திதாலும் அதன் வெகுஜன கோரிக்கைகள் உலக தொழிலாளர்கள் மத்தியில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது. சாசனவாதிகளின் இலக்காக விளங்கிவந்த பத்து மணி நேரம் வேலை என்பது 1847ஆம் ஆண்டு ஒரு சட்டத்தின் மூலம் நிறைவேறியது. இது பெண்களுக்கும் குழந்தை தொழிலாளர்களுக்கும் சில இடங்களில் ஆண்களுக்கும் இது அமல்படுத்தபட்டது. சாசன இயக்கம் பற்றி மார்க்ஸ் மற்றும் லெனின்: இது குறித்து மார்க்ஸ் “” சாதாரண வேலைநாள் உருவானது என்பது முதலாளித்துவ வர்க்கத்திற்க்கும் தொழிலாளர் வர்க்கத்திற்க்கும் இடையே…

Read More

இந்திய தொழிலாளர் வர்க்கம் வளர்ந்து வந்த வரலாறு பகுதி-3

ராபர்ட் ஓவனின் கூட்டுறவு தத்துவம் சரிவுக்கு பிறகு தொழிலாளர்கள் அதுவரையில் அடைந்திருந்த அனுபவமானது பொருளாதார கோரிக்கைகளை மட்டுமே கொண்ட நடவடிக்கைகளின் மூலம் முன்னேற்றம் அடைய முடியாது என்பதை படிப்படியாக புரிந்து கொள்ள வழிவகுத்தது. மக்கள் சாசனம்: இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் அடுத்த கட்டத்தில் வாக்குரிமை என்பது பிரதான அம்சமாக மாறியது .1836 ஆம் ஆண்டில் லண்டன் நகர உழைக்கும் ஆண்களின் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. அடுத்த ஆண்டில் வில்லியம் லோவெட் மற்றும் பலரின் முன்முயற்சியின் விளைவாக…

Read More