
அய்க்கூ கவிதைகள்: பகுதி-2 மகரந்தத்துகள்கள்..( – வானவன் ( சென்னை)
★ நிலா வந்ததுபசி நிற்கவில்லைசாலையோர குழந்தை. ★ மெல்ல வருடிதூக்கம் தந்ததுமின்விசிறி. ★ இரவில் பயணம்கவிழ்ந்த பேருந்துஎஞ்சின் மட்டும் உயிரோடு. ★ தூக்கம் வரவில்லைபுரண்டு படுத்தேன்மகளின் திருமணம். ★ வேலையில்லா பணம்ஏழையின் சந்தோஷம்இடைத்தேர்தல். ★ இதய அறுவைசிகிச்சைகாணாமல் போனதுகிட்னி. ★ அறுசுவை உணவுஅம்மனுக்கு படையல்அம்மா காப்பகத்தில். ★ பயிற்சி பெறாமல்நன்றாக ஓடியஃபைனான்ஸ் அதிபர். ★ வெளிநாடு செல்வாய்ஜோசியம் சொன்னதுகூண்டுக்கிளி. ★ பொது இடங்களில்புகை பிடிக்காதீர்போலீஸ் தவிர.