மேதினத்தின் வரலாற்று பின்னணி: தோழர் சிலம்பரசன் சே

மே தினம், உழைப்பாளர் தினம் என்று அடையாளப்படுத்தப்படும் இந்த நாள் தோன்றியதன் வரலாற்று பின்னணி என்பது மிக முக்கியமானது. விவசாய உற்பத்தியில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு சமூகம் மாறியவுடன் மிக வேகமாக சமூக மாற்றம் நடைபெற்றது. விவசாய உற்பத்தியில் நிலங்களோடு பிணைக்கப்பட்டு நிலப்பிரபு கட்டுப்பாட்டில் வாழ்ந்த நிலைமை மாறி ஆலை முதலாளிகளின் கட்டு பாட்டில் வாழும் நிலைக்கு பெரும்பான்மை மக்கள் தள்ளப்பட்டார்கள் இதனால் விவசாய உற்பத்தி முறையில் பிரிந்து வாழ்ந்து வந்த மக்கள் ஆலையில் வேலை…

Read More

லெனின் தொழிலாளி வர்க்கத்தின் ஆசிரியராகவும் நண்பராகவும் இருந்தார்:

நினைவுகூருதல் மற்றும் உத்வேகம் பெறுதல்… உழைக்கும் வர்க்கத்தின் மீதான கொடூரமான தாக்குதல்களின் இக்காலத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் தலைவரும், ஆசிரியரும், நண்பரும், உலகின் முதல் வெற்றிகரமான தொழிலாளர் புரட்சியின் தலைவருமான லெனினை நினைவு கூர்வது இன்று மிகவும் பொருத்தமானது. சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் தளைகளிலிருந்து விடுபட்டு உழைக்கும் மக்கள் எவ்வளவு அற்புதங்களைச் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்டிய சோவியத் யூனியனில் முதல் சோசலிச அரசு லெனின் தலைமையில் நிறுவப்பட்டது. விளாடிமிர் இலிச் லெனின் 1870 ஆம்…

Read More

தொழிற்சங்கம் பற்றி அண்ணல் அம்பேத்கர்…

முதலாளிகள் உழைப்பை விழுங்கும் முதலைகளாக இருக்கும் வரை தொழிலாளர்கள் துயரத்தில் மூழ்கி கொண்டு தான் இருப்பார்கள்.இந்த நாட்டில் தொழிலாளர்கள் பார்ப்பனியம்–முதலாளித்தும் என்ற இரண்டு எதிரிகளை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. தீண்டத்தகாதவர்கள் என்ற முத்திரை குத்தி ஒடுக்கப்பட்ட சாதி தொழிலாளிகளுக்கு பெரும்பாலான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன உயர் பதவிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இனம், மதம், என்ற காரணங்களை காட்டி ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளி மீது பகைமை கொண்டிருப்பதற்கான காரணங்களை அகற்றுவது தொழிலாளர் ஒற்றுமையை கொண்டு வருவதற்கான…

Read More

பற்றி எரிந்த வர்க்கப் போராட்டம் !***கீழ்வெண்மணி போராட்ட வரலாறு:

உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக விவசாயத் தொழிலாளிகள் 1967-இல் முன்வைத்தனர். அதாவது இதுவரையில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாள் கூலியாகிய 1படி நெல்லுடன் மேலும் ஒருபடி நெல் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அவை. ஆனால் பல மிராசுதாரர்கள் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். நமக்கு கீழே கைகட்டி வாய் பொத்தி வேலை செய்தவர்கள் இன்று நிமிர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தது ஆதிக்க வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை. விவசாய தொழிலாளர் சங்கம்…

Read More

வெண்மணி தீயினும் கொடியவர் தீயிலிட்டாரே!……(தோழர் தியாகு )..

அந்தக்‌ கொடுமை நிகழ்ந்து அரை நூற்றாண்டு ஆயிற்று. 1968 திசம்பர்‌ 25 கிறிஸ்துமஸ்‌ நாளில்‌ கீழ வெண்மணியில்‌ பட்டியலின மக்கள்‌.வாழும்‌ சேரியின்‌ கடைக்கோடியிலிருந்த இராமையாலின்‌ குடிசையில்‌ 44 உயிர்கள்‌ உயிரோடு எரிந்து – உண்மையில்‌ எரிக்கப்பட்டு — சாம்பலாயின. அது விபத்தன்று, படுகொலை! இவ்வளவு கொடிய தண்டனை பெறுவதற்கு அவர்கள்‌ செய்த குற்றம்‌? ஒரு குற்றமில்லை, பல குற்றங்கள்‌! நால்வர்ணத்துக்கு அப்பால்‌ பஞ்சமர்களாக, பட்டியலின மக்களாக பிறந்தது. குற்றம்‌! அடங்கி ஒடுங்கி அடிமைவேலை செய்து கொண்டிருந்தவர்கள்‌ விழிப்புற்று…

Read More

வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் மேலும் ஒரு தொழிலாளரின் சடலம் 4 நாட்களுக்குப் பின் மீட்பு:

சென்னை: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மற்றுமொரு தொழிலாளர் ஜெயசீலனின் சடலம் இன்று (வெள்ளி) மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டது. சடலத்தை பெட்டியில் வைத்து பேரிடர் மீட்புக் குழுவினர் வெளியே கொண்டுவந்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று அதிகாலையில் நரேஷ் என்ற இளைஞரின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீட்புக் குழுவில் ஈடுபட்ட நபர் ஒருவர் அளித்த பேட்டியில், ”பள்ளத்தில் மீட்புப் பணிகளுக்காக நாங்கள் வந்தபோது எங்களிடம்…

Read More

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினம் நினைவு கூர்வோம்:

“புரட்சி” என்ற வார்த்தை நம் காதுகளில் விழுந்தவுடன் நம் எண்ணத்தில் உடனே தோன்றுபவர்கள்; புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவி ஜெயலலிதா. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். திரைத்துறையிலிருந்து அதிகார அரசியலுக்கு வந்த இவர்களுக்கு புரட்சியின் பொருள் கூட புரியாது. ஆனால்….. புரட்சித்தலைவன் என்ற சொல் உலகில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர்தான் மேதை லெனின்! அந்த புரட்சி வென்ற நாள்தான் 1917 நவம்பர் 7 ஆம் நாள். இந்நாள் உலக கம்யூனிஸ்ட்களால் கொண்டாடப்படுகின்ற ஓர் ஒப்பற்ற நாள். புரட்சிக்கு முன்னால் ஜார்ஜ்…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -9

நிலப்பிரபுத்துவத்தின்‌ அழிவின்‌ மீது முதலாளித்துவத்தின்‌ வளர்ச்சி என்ற செயல்முறை ஐரோப்பாவில்‌ நடைபெற்றதைப்‌ போல இந்தியாவில்‌ காண முடியாது. ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்‌ இந்தியாவின்‌ புராதனப்‌ பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கிய போதிலும்‌, நவீன முதலாளித்துவப்‌ பொருளாதாரத்திற்கான சக்திகளைக்‌ கட்டவிழ்த்து விடுவதன்‌ மூலம்‌ அதனிடத்தில்‌ அதனை அமர்த்துவதற்கு அவர்கள்‌ முயற்சிக்கவில்லை. எனவே இந்தியாவில்‌ முதலாளித்துவ பொருளாதாரத்தின்‌ வளர்ச்சி என்பது வேறுபட்டதொரு பாதையைப்‌ பின்பற்றியது. அந்தப்‌ பாதையானது வித்தியாசமான முரண்பாடுகள்‌, தடைகள்‌ மற்றும்‌ இந்திய மக்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்கள்‌ நிறைந்ததாகவே இருந்தது. இவ்வாறு…

Read More

அய்க்கிய அமெரிக்காவில்‌ தொழிலாளர்‌ திருவிழா:

கட்டுரையாளர்: செம்பா. கம்யூனிஸ்ட்‌ இதழ்‌ அக்‌ – 2023 2008 பொருளாதார நெருக்கடிக்குப்‌ பிறகு அய்க்கிய அமெரிக்க தொழிலாளர்‌ ஊதியம்‌ 19% சரிந்துள்ளதாக அய்க்கிய அமெரிக்காவின்‌ பொருளாதார கொள்கை நிறுவனம்‌ சொல்கிறது. அய்க்கிய அமெரிக்க சராசரி தொழிலாளி யின்‌ ஊதியம்‌ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது குறைந்துவிட்டது என்று அய்க்கிய அமெரிக்க செனட்‌ உறுப்பினரும் தொழிலாளர்‌ உரிமை செயல்பாட்டாளரு மான பெர்னி சான்டர்ஸ்‌ சொல்கிறார்‌. அய்க்கிய அமெரிக்க வளமையின்‌ அடை யாளங்களாக கருதப்படுகிற கார்‌…

Read More

ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலை மற்றும் அவர்களின் உரிமைகள்:

ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது எல்லா தொழிற்சாலைகளிலும் அது தனியார் துறையாக இருந்தாலும் சரி மாநில ,ஒன்றிய அரசுகளின் துறையாக இருந்தாலும் சரி தொடர்ச்சியான பணிகள் அனைத்திலும் பரவி இருகிறது.இந்த முறை 1860 ஆம் ஆண்டு தொடங்கினாலும் 1990 ல் இந்தியாவில் உலகமயம் தாராளமய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்ட பிறகே வலுபெற தொடங்கியது. சோவியத் யூனியன் வளர்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் மக்கள் நல திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் முதலாளித்துவ நாடுகளுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது இப்பின்னணியில்…

Read More