வெண்மணி தீயினும் கொடியவர் தீயிலிட்டாரே!……(தோழர் தியாகு )..
அந்தக் கொடுமை நிகழ்ந்து அரை நூற்றாண்டு ஆயிற்று. 1968 திசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாளில் கீழ வெண்மணியில் பட்டியலின மக்கள்.வாழும் சேரியின் கடைக்கோடியிலிருந்த இராமையாலின் குடிசையில் 44 உயிர்கள் உயிரோடு எரிந்து – உண்மையில் எரிக்கப்பட்டு — சாம்பலாயின. அது விபத்தன்று, படுகொலை! இவ்வளவு கொடிய தண்டனை பெறுவதற்கு அவர்கள் செய்த குற்றம்? ஒரு குற்றமில்லை, பல குற்றங்கள்! நால்வர்ணத்துக்கு அப்பால் பஞ்சமர்களாக, பட்டியலின மக்களாக பிறந்தது. குற்றம்! அடங்கி ஒடுங்கி அடிமைவேலை செய்து கொண்டிருந்தவர்கள் விழிப்புற்று…