காஞ்சிபுர மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள யுனிபிரஸ் என்ற ஜப்பான் நிறுவனம் தொடர்ந்து தொழிற்சங்க உரிமைகளை மறுத்து அடாவடி தனம் செய்து வருகிறது .
தொழிலாளர்களால் எந்த வித இடையூறும் இல்லாமல் நிறுவப்பட்ட சிஐடியு தொழிற்சங்க கொடி மற்றும் பெயர் பலகையை புல்டோசர் கொண்டு அகற்றி நிர்வாகம் அடாவடிதனம் செய்தது.
இதற்கு பதிலடியாக தொழிற்சங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பான்மையான தொழிலாளர்களை திரட்டி ஊர்வலமாக சென்றுஅதே இடத்தில் நேற்று(24/08/2023) மாலை கொடியேற்றியது.
ஒரகடம் பகுதி தொழிற்சாலை நிர்வாகங்கள் தொடர்ந்து தொழிலாளர்களை ஒடுக்குவதில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட வேண்டும் . தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள்.
#unipress #kanchipuramoragadam #corporate #unionrights