அய்க்கூ கவிதைகள்: பகுதி-2 மகரந்தத்துகள்கள்..( – வானவன் ( சென்னை)

★ நிலா வந்தது
பசி நிற்கவில்லை
சாலையோர குழந்தை.

★ மெல்ல வருடி
தூக்கம் தந்தது
மின்விசிறி.

★ இரவில் பயணம்
கவிழ்ந்த பேருந்து
எஞ்சின் மட்டும் உயிரோடு.

★ தூக்கம் வரவில்லை
புரண்டு படுத்தேன்
மகளின் திருமணம்.

★ வேலையில்லா பணம்
ஏழையின் சந்தோஷம்
இடைத்தேர்தல்.

★ இதய அறுவை
சிகிச்சைகாணாமல் போனது
கிட்னி.

★ அறுசுவை உணவு
அம்மனுக்கு படையல்
அம்மா காப்பகத்தில்.

★ பயிற்சி பெறாமல்
நன்றாக ஓடிய
ஃபைனான்ஸ் அதிபர்.

★ வெளிநாடு செல்வாய்
ஜோசியம் சொன்னது
கூண்டுக்கிளி.

★ பொது இடங்களில்
புகை பிடிக்காதீர்
போலீஸ் தவிர.

             - வானவன் ( சென்னை சிம்சன் தொழிலாளர், இயற்கை ஆர்வலர் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *