காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் இயங்கி வரும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர் .இந்நிலையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ-ன் ஒரு நேர்காணல் இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியானது. அதை ஒட்டி தொழிலாளர்களும் தொழிற்சங்கமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது தொழிலாளர்கள்தான், ஆனால் அடிப்படை உரிமைகளுக்கு போராடிய தொழிலாளர்கள் 61 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தொழில் பாதுகாப்பு துறை இந்த பணிநீக்கத்தை ரத்து செய்த பின்னரும் அவர்களுக்கு பணி வழங்காமல் காலம் தாழ்த்தி நீதிமன்றம் சென்று வருகிறது நிறுவனம்.ஆண்டுக்கு 2000 கோடி லாபம் ஈட்டும் நிறுவனம் என கூறும் சி.இ.ஓ தொழிலாளர்களுக்கு குறைவான போனஸ் தொகையும், அதிகப்படியான போனஸ் அதிகாரிகளுக்கும் எடுத்துக்கொள்வதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முறையான தேர்தல் நடத்தி தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சங்கத்தை அமைக்க தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள் .போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.