
LTUC தொழிற்சங்கம், உழைப்போர் உரிமை இயக்கம், ஹூண்டாய் ,ரொனால்ட் நிசான் , தூய்மை பணியாளர்கள் , கோஆஃப்ட்க்ஸ் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் NIFCO,நம்மவர் தொழிற்சங்க பேரவை ,Kanchi kamakoti child Hospital Employees Union போன்ற பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


தொழிலாளர்துறை முழுக்க முழுக்க கார்ப்பரேட் பன்னாட்டு நிறுனங்களின் அடிவருடிகளாக சிறப்பாக செயல்படுகிறார்கள் ஒரு தொழிற்சாலை தொடங்கும் போது 10ஆண்டுகள் (அ) 15 ஆண்டுகள் என நிலம் தொடங்கி நீர் , மின்சாரம் வரி என அணைத்து சலுகைகளையும் மக்கள் வரிப்பணத்தில் அரசால் வழங்கப்படுகிறது ஒட்டுமொத்தமாக பயன்படுத்தி விட்டு தொழிலாளர்களின் உழைப்பையும் ஒட்ட சுரண்டிவிட்டு செல்லும் நிறுவனங்களை தடுக்க வக்கில்லாத தொழிலாளர்துறை நிர்வாகம் கொடுக்கும் பணத்தை வாங்கிகொள்ளுமாறு தொழிலாளர்களிடம் பேரம் பேசுகிறது .இதுவரை ஃபோர்டு நிறுவனம் முறைப்படி ஆலை மூடலுக்கு விண்ணப்பிக்கவில்லை ஒவ்வொரு தொழிலாளர்களின் வீட்டிற்க்கும் மிரட்டல் கடிதங்கள் அனுப்பபட்டுள்ளது நிர்வாகம் தரும் தொகையை வாங்கிகொள்ள சம்மதிக்காவிட்டால் இந்த குறிப்பிட்ட தொகையும் கிடைக்காது என குறிப்பிட்டுள்ளது இதுபோன்ற தொழிலாளர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவும் போராட்டங்களை முடக்கவும் நிர்வாகம் எடுக்கும் செயல்களுக்கு அரசு துணை நிற்கிறது.
ஃபோர்டு நிறுவனம் போல் அரசின் முறையான எந்தவித அனுமதியும் இல்லாமல் நிரந்தர தொழிலாளர்களை நீக்கவும் தொழிற்சாலையை மூடவும் முடியும் என மற்ற நிறுவனங்களுக்கு வழிக்காட்டிவருகிறது .ஆகையால் தொழிலாளர்கள் இதுபோன்ற அரசு கார்ப்பரேட்டின் செயல்களை முறியடிக்க வர்க்க ரீதியில் அணிதிரள வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.
ஃபோர்டு தொழிலாளர்களின் போராட்டத்திற்க்கு வலுசேர்ப்போம்!
